Monday, November 30, 2009

வாழ்வின் பொருள் என்ன?

அமெரிக்க பேராசிரியரான ஹியூஜ் மூர்ஹெட் என்பவர், உலகத்தின் தலைசிறந்த அறிவாளிகள் 250 பேரைத் தேர்ந்தெடுத்து, "வாழ்வின் அர்த்தம் என்ன?' என்று ஒரு கேள்வி கேட்டார். அந்த அறிவு ஜீவிகள் ஆளுக்கொரு கருத்தைக் கூறினர். அவற்றைத் தொகுத்து அவர் ஒரு புத்தகம் வெளியிட்டார்.
வாழ்வைப் பற்றி அவர்கள் சொன்னது எல்லாமே வெறும் யூகங்களாகவும், தற்பெருமை கொண்டதாகவுமே அமைந்திருந்தன. ஒருவர் கூட "கடவுளின் சித்தப்படியே நமது வாழ்வு அமைந்திருக்கிறது' என சொல்லவில்லை.
மூர்ஹெட் வாழ்வைப் பற்றி எழுதும் போது, "சிருஷ்டிப்பின் நோக்கம் இறைவனுக்கு மட்டுமே தெரியும். ஏனெனில் நாம் தாயின் கருவில் உருவாகும் முன்பே தேவனுடைய சிந்தையில் இருந்தோம் என்பது உறுதியான விஷயம்,' என்று சொல்லியிருந்தார்.
""நான் உனக்கு போதித்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்கு காட்டுவேன். உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்,'' என்று இயேசு சொன்னது பைபிளில் இருக்கிறது.
ஆம்...ஆண்டவரே நம்மை வழி நடத்த முடியும். "நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களே வாழ்க்கை, இதன் அர்த்தம் என்ன?' என்று யாராவது உங்களிடம் கேட்டால், "அது ஆண்டவனின் சித்தத்தைப் பொறுத்தது, அவர் எண்ணப்படியே எல்லாம் நடக்கும்' என பதில் சொல்லக் கற்றுக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment