Monday, November 30, 2009

குழந்தைகளே! இதைப்படிங்க முதல்லே...!

நாம் இந்த உலகில் செல்வச்செழிப்புடனும், புகழுடனும் நடமாட காரணமானவர்களே பெற்றோர் தான். சில பிள்ளைகள் பெற்றோர் சொல் கேளாமல், தாங்களே தறுதலைகளாக திரிந்துவிட்டு, இறுதியில் பெற்றோர் மீது பழி போடுவார்கள். பெற்றவர்கள் சம்பாதித்து தந்த காசை படிப்பதற்கு பயன்படுத்தாமல், பயனற்றதும், தீமை தருவதுமான பொழுதுபோக்குகளில் செலவிட்டு, பெற்றவர்களைப் பழிப்பதற்கு இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? மேலும், சிலர் நன்றி மறந்து தங்களை ஆளாக்கிய பெற்றோருக்கு ஒரு வேளை கஞ்சி கூட தராமல் கொடுமை செய்வார்கள். பெற்றோரைக் கொடுமை செய்யும் பிள்ளைகள் குறித்து பத்திரிகைகளில் நிறையவே நாம் படிக்கிறோம்.
மத்திய அரசாங்கம் முதியோரின் நலன் கருதி, முதியோர் குறைதீர்ப்பு ஆணையம் ஒன்றை அமைத்து, கொடுமைக்கார பிள்ளைகளிடமிருந்து பெற்றவர்களைக் காப்பாற்றும் சட்டம் கொண்டு வருமளவுக்கு நிலைமை போய் விட்டது.
பெற்றோரைக் கொடுமை செய்யும் பிள்ளைகள், பைபிளைப் படித்திருந்தால் இப்படி செய்திருப் பார்களா?
உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக,'' என்பதும், உன்னைப் பெற்ற தகப்பனுக்கு செவிகொடு, உன் தாய் வயது சென்றவளாகும்போது அவளை அசட்டை பண்ணாதே,'' என்பதும் பைபிள் வசனங்கள்.


பெற்றோரை மதிக்காமல் அகால மரணம் அடைவதை விட, அவர்களை மதித்து ஆயுளை அதிகரித்துக் கொள்வதுடன், ஆண்டவரின் ஆசிர்வாதத்தையும் பெறுவோம். நம் அன்புக்குழந்தைளுக்கு இந்த வசனங்களை கற்றுத்தந்து, இளமையிலேயே பெற்றோரைக் காப்பாற்றும் நல்லெண்ண விதையை ஊன்றுவோம்.


மூன்று முத்தான வசனங்கள்


* மூச்சு உள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக.


*வாலிபர்களே, கன்னி பெண்களே, கிழவர்களே, குழந்தைகளே, கர்த்தரைத் துதியுங்கள்.


* கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்கு திறக்கப்படும்.

No comments:

Post a Comment