Monday, November 30, 2009

கடவுள் மீது விசுவாசம் வேண்டும்

கடவுளிடம் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, பைபிளில் சொல்லப்பட்டுள்ள ஒரு சம்பவத்தைக் கேளுங்கள். மனிதனின் அட்டூழியங்களை தாங்கமாட்டாத கடவுள், இந்த உலகை ஜலப்பிரளயத்தால் அழிக்க நினைத்தார். ஆனாலும் நீதிமானும், உத்தமனுமாய் இருப்போரை பிரளயத்தில் இருந்து தப்பிக்கவும் கரிசனையுள்ளவராயிருந்தார். நோவா என்பவன் அத்தகைய உத்தமனாயிருந்தான். அவனையும், அவனது குடும்பத்தையும் தப்புவிக்கும் பொருட்டு ஒரு பேழையைச் செய்யச் சொன்னார்.
நோவா நூறு ஆண்டுகளாக ஒரு பேழையைச் செய்தான். இதைக் கண்டவர்கள் எள்ளி நகையாடினர். "கடவுள் சொன்னார் என்பதற்காக இப்படி செய்து கொண்டிருப்ப தாகச் சொல்கிறானே! இதை எப்படி நம்புவது" என்று பரிகாசம் செய்தனர்.
பைபிளில் ஒரு அழகான வசனம் உண்டு.
"காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்ப வேண்டுவதென்ன? நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்கு பொறுமையோடே காத்திருப்போம்" என்பதே அவ்வசனம்.
வானத்திலே நிலா இருக்கிறது என்றால் சூஆம், அதைக் கண்ணால் பார்ப்பதால் நம்புகிறேன்' என்பது பெரிய விஷயமல்ல. சூஇந்த பூமியில் தேவன் இருக்கிறார். அவரது வருகை ஒருநாள் நிச்சயம்' என சொல்வதை நம்பவேண்டும்.
நோவா கடவுள் சொன்னதைச் செய்தார். சொன்னது போலவே பிரளயம் வந்தது. கேலி செய்தவர்களெல்லாம் அழிந்தனர். நோவாவின் குடும்பம் மட்டும் கடவுள் மீது கொண்ட விசுவாசத்தால், அவர் சொன்னதைக் கேட்டதால் பேழையில் அமர்ந்து தப்பியது. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மீண்டும் வருவார் என்பதை விசுவாசிக்க வேண்டும். அவர் வரும் நாளில் நாம் எப்படியிருக்க வேண்டும் என்பதை இப்போதே முடிவு செய்ய வேண்டும்.
அவரது பிள்ளைகளாக திகழ்ந்து, அவர் சொன்னதை விசுவாசித்து, நல்லவழியில் வாழ வேண்டும். அதற்கு இப்போதே உறுதி எடுப்போமா?

No comments:

Post a Comment