Monday, November 30, 2009

எல்லாம் கடவுள் சித்தம்

இரண்டு நண்பர்கள் விமானத்தில் வெளிநாட்டுக்கு புறப்பட்டனர். விமானம் பறந்து கொண்டிருந்த போது, இரண்டு பேர் எழுந்து, தாங்கள் தீவிரவாதிகள் என்றும் விமானத்தை கடத்தப்போவதாகவும் அறிவித்து எங்கோ கடத்தி சென்றனர். விமானக்கம்பெனியிடம், விமானத்தை விடுவிக்க பலகோடி ரூபாய் கேட்டனர். அப்போது ஒரு நண்பர் இன்னொரு நண்பரிடம்,""விமானம் கடத்தப்பட்டதால் நாம் வெளிநாட்டில் பலகோடி நஷ்டமடைவோம். நமது வியாபாரம் என்னாகப்போகிறதோ?'' என்றார். அதற்கு அந்த நண்பரோ,""எல்லாம் கடவுள் சித்தம். கடவுள் மீது நம்பிக்கை உடையவர்கள் எதற்காகவும் அஞ்ச வேண்டியதில்லை,''என்றார். ஒரு வழியாக விமானத்தை அதிகாரிகள் மீட்டனர். விமானம் மீண்டும் பறக்க ஆரம்பித்தது. வெளிநாடு சென்றதும் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றனர். அங்கே பெரும் கூட்டம் கூடியிருந்தது. அவர்கள் தங்கவிருந்த ஓட்டல் பூகம்பத்தில் சிக்கி நொறுங்கி கிடந்தது. பலர் இறந்து போயிருந்தார்கள். திட்டமிட்ட நாளிலேயே, அவர்கள் அங்கு வந்து சேர்ந்திருந்தால் அவர்களும் இறந்தவர்கள் பட்டியலில் இருந்திருப்பார்கள். நண்பரின் வார்த்தைகளை மற்றொரு நண்பர் அசைபோட்டு பார்த்தார். "கர்த்தருக்கு பயப்படுகிறவனுக்கு திட நம்பிக்கை உண்டு' என்று பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது. கடவுளுக்கு அஞ்சி, அவர்மீது தீவிர நம்பிக்கை கொள்பவர்களுக்கு, கெட்டது நடப்பது போல தோன்றினாலும், முடிவில் மிகுந்த நன்மையே கிடைக்கும் என்பது உறுதி.

No comments:

Post a Comment