Monday, November 30, 2009

வினை விதைத்தவன் வினை அறுப்பான்

ஒரு மர வியாபாரியும், இரும்பு வியாபாரியும் நண்பர்களாக இருந்தனர். இரும்பு வியாபாரிக்கு வியாபாரம் அதிகமானது. அதனால் அவர் தனது வீட்டை விரிவாக்கம் செய்ததுடன், ஏராளமான பொருட்களையும் வாங்கி குவித்தார். மர வியாபாரிக்கோ அந்த அளவுக்கு வருமானம் இல்லை. எனவே தன் நண்பன் மீது பொறாமை ஏற்பட்டது. காலப்போக்கில், அவர்களது நட்பில் விரிசல் ஏற்பட்டது. ஒருமுறை, இரும்பு வியாபாரி வெளியூர் சுற்றுலா கிளம்பினார். தன் நண்பரிடம் கடையை ஒப்படைத்து வியாபாரத்தை கவனித்து கொள்ளும்படி சொல்லி சென்று விட்டார். இதுதான் சமயம் என காத்திருந்த மர வியாபாரி கடையில் இருந்த எல்லா இரும்புகளையும் விற்று ஒட்டு மொத்த பணத்தையும் அபகரித்து கொண்டார். ஊரிலிருந்து திரும்பிய இரும்பு வியாபாரி பணத்தை தரும்படி கேட்டார். தன்னிடம் பணம் ஏதும் இல்லை என்றும், இரும்பை எலிகள் தின்று விட்டதாகவும் சொல்லி விட்டார். ஏமாற்றமடைந்த இரும்பு வியாபாரி நீதிமன்றத்திற்கு சென்றார்.
நீதிபதியிடம் மரவியாபாரி எலிகள் தான் இரும்பை தின்றன என அடித்துப்பேசினார். நீதிபதியும் அதை ஒப்புக்கொள்வதைப் போல் நடித்தார். இதனால் விரக்தியடைந்த இரும்பு வியாபாரி, ஒரு விழாவிற்கு மர வியாபாரியின் மகனையும் அழைத்து சென்று ஓரிடத்தில் மறைத்து வைத்து விட்டார். மர வியாபாரியிடம், "விழாவுக்கு போன இடத்தில் உன் மகனை கழுகு தூக்கிசென்று விட்டது' என கூறினார்.


பதட்டமடைந்த மர வியாபாரி, நீதிமன்றத்திற்கு சென்றார். பத்து வயது மகனை கழுகால் எப்படி தூக்க முடியும் என வாதிட்டார். "இரும்பை எலி தின்னுமானால், பத்து வயது சிறுவனை கழுகு தூக்கி செல்லாதா?' என நீதிபதி திருப்பி கேட்கவும், புத்தி வந்த மரவியாபாரி, நீதிபதியிடமும் நண்பரிடமும் மன்னிப்பு கேட்டு பணத்தை திருப்பிக்கொடுத்தார். மர வியாபாரியும், இரும்பு வியாபாரியின் மகனை திரும்ப ஒப்படைத்தார். பைபிளில் "மனுஷன் எதை விதைக்கிறானோ, அதையே அறுப்பான்' என்ற வசனம் இருக்கிறது. இதை மனதில் கொண்டு, நமது செயல்பாடுகளை திருத்தி கொள்ள வேண்டும்

No comments:

Post a Comment