Monday, November 30, 2009

அவரை மட்டுமே நம்புங்கள்!

அமெரிக்காவில் வசித்த மரியன் என்ற நீக்ரோ பெண்மணிக்கு இசையில் நிறைய ஆர்வம் உண்டு. கருப்பு இனத்தவர் பாடல் கற்றுக் கொள்வதையோ, மேடையில் பாடுவதையோ உயர் இனத்தினர் விரும்பவில்லை. இதற்காக அவர் கண்ணீர் வடித்தார். மரியனின் தாய் மகளிடம், ""நீ கவலைப்படாதே. நாம் நினைப்பது நடக்கவேண்டும் என்று நம்பிக்கை கொள்வதில் தவறில்லை. அந்த நம்பிக்கை செயல்வடிவம் பெறவில்லை என்றால், ஆண்டவருக்கு அதில் விருப்பமில்லை என்று பொருள். நீ உன்னை நம்புவதை விட, கடவுளை நம்பு. அவருக்கு விருப்பமிருந்தால், எந்த சக்தியும் நீ பாடகியாவதைத் தடுக்க முடியாது,'' என்றார்.மரியனும் ஆண்டவரை ஜெபித்து வந்தார். அவரது ஜெபம் ஆண்டவரை எட்டியது. ஒரு இசையாசிரியர்மரியனை தனது மாணவியாக ஏற்றுக் கொண்டார். இசையைக் கசடறக் கற்றார். ஒரு ஈஸ்டர் தினத்தன்று மரியமின் இசை நிகழ்ச்சி ஆபிரகாம்லிங்கன் மண்டபத்தில் அரங்கேறியது. மண்டபத்தில் திரண்டிருந்த 75 ஆயிரம் ரசிகர்களும் அவரது இசை கேட்டு எழுப்பிய கரகோஷத்தால் விண்ணைப் பிளந்தது.மரியன் ஆனந்தண்ணீர் வடித்தார்.""மனுஷரை நம்புவதைப் பார்க்கிலும் கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்'' என்ற பைபிள் வசனம் உண்மை என்பது இப்போதாவது புரிகிறதா?

No comments:

Post a Comment