Sunday, November 29, 2009

ஆண்டவரை நம்பினால் எதுவும் கிடைக்கும்

நியூயார்க்கில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சம்பவம்.. எல்லோரையும் உலுக்கிக் கொண்டிருந்த கடும் குளிரில் ஒரு சிறுவன் கந்தல் உடையுடனும், வெறும் காலுடனும் ஒரு செருப்புக்கடையின் வெளியே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது பெரும் செல்வந்தரான ஒரு பெண்மணி குதிரைகள் பூட்டிய தன்னுடைய ரதத்தில் வந்தாள். சிறுவன் குளிரில் நடுங்குவதைக் கண்டு,. அவனிடம், ""தம்பி! இங்கு நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?'' என கருணையோடு கேட்டாள்.


""அம்மா! குளிர் தாங்கமுடியவில்லை. நான் என் இயேசுவிடத்தில் ஒரு ஜோடி ஷ� கேட்டிருக்கிறேன். அவர் அதை எனக்கு தருவார் என நம்பி இங்கே காத்திருக்கிறேன்,'' ஒரு நிச்சயத்துடன் பதிலளித்தான். அந்த பதில் அந்த பெண்மணியை வியப்பில் ஆழ்த்தியது. ஆண்டவர்மீது அவன் கொண்ட நம்பிக்கையான விசுவாசத்தை எண்ணி பெருமிதம் அடைந்தாள். அந்த அளவுக்கு அவர் மீது தனக்கு விசுவாசம் இருக்கிறதா என்று சுயபரிசோதனையும் செய்து கொண்டாள். அவனை அழைத்துக்கொண்டு ஒரு கடைக்குள் சென்றாள்."இந்த சிறுவனுக்கு ஆறு ஜோடி உல்லன் சாக்ஸ் கொடுங்கள்' என கடைக்காரரிடம் சொன்னாள். இன்னொரு பணியாளரிடம் ஒரு அகன்ற பாத்திரத்தில் தண்ணீரும், ஒரு டவலும் கொண்டு வரச்சொன்னாள். அவர் அதை கொண்டுவந்தார்.


அந்தச்சிறுவனை ஒரு நாற்காலியில் அமரவைத்து தனது கையுறையை கழற்றிய அந்த சீமாட்டி, அவனுடைய கால்களை கழுவி, துண்டால் துடைத்தாள். அந்தக் காட்சி, இயேசு தம்முடைய சீடர்களின் கால்களை கழுவி துடைத்ததுபோல அமைந்தது. பின்னர் சாக்ஸை அவனது கால்களில் அணிவித்தாள். அப்போது அந்த சிறுவன் அவளிடம், "நீங்கள் இயேசுவின் மனைவியா?' என்று கேட்டுவிட்டான். அந்தப்பெண்மணிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவளுக்கு ஒரே திகைப்பு. அவளிடமிருந்து பதில் வராததால் மீண்டும் அந்தச்சிறுவன், "நீங்கள் இயேசுவுக்கு வேறு ஏதாவது வகையில் சொந்தமா?' என்று கேட்டான். அப்போது அவளது மனதில் பைபிள் வசனம் ஒன்றுதான் நினைவுக்கு வந்தது.


""நான் உங்களை கற்புள்ள கன்னிகையாக கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால் உங்களுக்காக தேவ வைராக்கியமான வைராக்கியம் கொண்டிருக்கிறேன். (2 கொரி.11:2)'' என்ற வசனமே அது. "தேவ கிருபையில் ஜீவனுள்ள நம்பிக்கை வைப்பதே விசுவாசம்' என்ற மார்ட்டின் லூதரின் கருத்தும் இந்த இடத்தில் நினைவுகூரத்தக்கது. ஆண்டவரிடம் நம்பிக்கையுடன் ஜெபித்தால், நாம் கேட்பதை யார் மூலமாகவாவது அவர் தந்தருள்வார் என்பதில் சந்தேகமில்லை

No comments:

Post a Comment