Monday, November 30, 2009
ஏமாற்றி பிழைக்கக்கூடாது
இருவர் ஒரே ஊரில் துணி வியாபாரம் செய்தனர். ஒருவன், வெளி மாநிலத்தில் இருந்து தரம் குறைந்த துணியை வாங்கிவந்து, சூபிரபலமான துணி' என்று பொய் சொல்லி அதிக விலைக்கு விற்றுக்கொண்டிருந்தான். அவனது பேச்சில் மயங்கியவர்கள் விலையை பார்க்காமல், துணி வாங்கினர். குறுகிய காலத்திலேயே அவன் பெரும் செல்வந்தன் ஆனான். பணம் வந்ததும், தீய செயல்களையும் செய்ய துவங்கிவிட்டான். இன்னொருவனோ, உள்ளூர் துணிகளை நியாயமான லாபத்திற்கு விற்று தன் வாழ்க்கையை சீராக நடத்தி வந்தான். நாட்கள் ஓடியது. தரம் குறைந்த துணியை வாங்கிய மக்கள், அது விரைவில் கிழிந்ததால், செல்வந்தனின் கடையை முற்றுகையிட்டனர். அவனை அதிகாரிகள் கைது செய்தனர். அவனது குடும்பம் நடுத்தெருவிற்கு வந்தது. "பொய் சொல்லி திரட்டும் பெரும் செல்வமானது. சாகப் போகிறவன் அங்குமிங்கும் புரள்வது போல வீண் மூச்சே ஆகும். வெறும் பகட்டின் மூலம் சுலபமாய் சேர்த்த செல்வம் விரைவிலே குறைந்து போகும். ஆனால், உழைப்பின் மூலம் சிறுகச்சிறுக சேகரிப்பவனோ செல்வத்தைப் பெருக்குவான். எரிக்கும் உஷ்ணத்துடன் சூரியன் உக்கிரமாக உதயமான வுடனேயே புல் பூண்டு மீது பட்டு அது உலரவே, பூ உதிர்ந்து அதன் அழகான வடிவம் அழிந்து போகிறது. அதுபோலவே, செல்வந்தனும் தன் போக்குகளினாலேயே வாடிப் போகிறான்," என்ற பைபிள் வசனங்கள் பணத்தின் மீது ஆசை கொண்டு தீய செயல்களில் ஈடுபடக்கூடாது என்று வலியுறுத்துகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment