ஒரு ஆலயத்தின் அருகில் மதுக்கடை திறக்க ஒரு பிரமுகர் ஏற்பாடு செய்து பணியைத் துவக்கினார். சபை அங்கத்தினர்கள் எதிர்த்தனர். ஆனால், அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. சபையார் ஒன்றுகூடி, அங்கே அந்தக்கடை வராமல் இருக்க உபவாசமிருந்து ஊக்கமாய் தேவனிடம் ஜெபித்ததுடன், நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். வழக்கு விசாரணைக்கு வந்த பாடில்லை.
இதற்குள் கட்டட வேலை முடிந்து விட்டது. திறப்புவிழா அறிவிப்பு வெளியிடப் பட்டது. அங்கத்தினர்கள் திகைத்து நின்றார்கள். எனினும், ""இதை தடுத்து நிறுத்த உமக்கு வல்லமையுண்டு. நாங்கள் விசுவாசிக்கிறோம்'' என்று மேலும் ஊக்கமாக ஜெபித்தார்கள். திறப்புவிழாவுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக பெரும் மின்னலுடன் காற்றும் மழையும் ஏற்பட்டது. அந்த புதிய கட்டடத்தை இடி தாக்கி சரிந்தது. சபையாருக்கு மிகவும் சந்தோஷம். தங்களது ஜெபத்திற்கு இரங்கி, தேவனே நேரடியாகத் தலையிட்டு பெரிய காரியங்களைச் செய்தார் என மகிழ்ந்தனர். உடனே கடை <உரிமையாளர், ""இவர்களது ஜெபமே எனது கடை பாழ்பட காரணமாக இருந்தது. இதற்கு இவர்கள் இழப்பீடு தர வேண்டும்,'' என சபையார் மீது வழக்கு தொடர்ந்தார். சபையாரோ இவரது கட்டடம் நாசமாக எங்களது ஜெபம் எந்த வகையிலும் பொறுப்பல்ல'' என பதில் அறிக்கை கொடுத்தனர்.
உடனே நீதிபதி சபையாரிடம், ""அப்படியானால், மதுக்கடை உரிமையாளருக்கு உங்கள் ஜெபத்தின் மீதிருக்கும் நம்பிக்கை, உங்களுக்கு இல்லை... அப்படித்தானே,'' என்று சபையாரைக் கேட்டார்.
""எங்களது ஜெபத்தின் வல்லமையால் தேவன் இப்படி செய்தார் என்று சொல்ல முடியாதது கோழைத்தனம் இல்லையா? இது வேலைக்காரப் பெண் முன்பாக பேதுரு இயேசுவை மறுதலித்தது போல் இருக்கிறது.
""மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின்முன்பாக மறுதலிப்பேன்,'' என்கிறார் இயேசுநாதர்
No comments:
Post a Comment